
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.
அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம் விழுந்த பகுதியில் பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில் அங்கு இருந்த பயிற்சி மருத்துவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த விமான விபத்து பற்றி முன்கூட்டியே சாமியார் ஒருவர் கணித்துக் கூறிய அருள் வாக்கு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நயாநகரில் சுக்தேவானந்தா சுவாமி மடம் உள்ளது.
அந்த மடத்தின் மடாதிபதியாக அபினவ சித்தலிங்க சுவாமிஜி உள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி மடத்தின் திருவிழாவில் எதிர்காலம் குறித்த அருள்வாக்கு கூறியுள்ளார். அந்த அருள்வாக்கில், வரும் நாட்களில் நாட்டில் பலத்த தீ விபத்து ஏற்படும்.
அதுவும் பெரும் விமான விபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ஒரு நகரமே அழியும் எனக் கூறியிருந்தார். இதனை அகமதாபாத் விமான விபத்து குறித்து தான் சாமியார் கணித்துள்ளார் என பக்தர்கள் பலரும் கூறி வருகின்றனர். தற்போது சாமியாரின் அருள்வாக்கு இணையதளங்களில் பேசுப்பொருளாக மாறி உள்ளது.