
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.
அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம் விழுந்த பகுதியில் பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில் அங்கு இருந்த பயிற்சி மருத்துவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்தது. இந்த விமான விபத்தில் சிக்கிய போகிலால் (57) மற்றும் அவரது மனைவி ஹன்சா(55) பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்செய்தியை கேட்ட போகிலாலின் அக்கா கோமதி (65) மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால் போகிலால் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அதற்குள் தம்பியின் இறப்பை ஏற்க முடியாத அக்கா மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை மேலும் மன வேதனை அடையச் செய்துள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த போகிலாலின் இறுதிச் சடங்குகள் நடத்தப்படாத நிலையில், அவரது அக்கா கோமதியின் இறுதிச்சடங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்துள்ளது.