தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொலை போன்றவையும் அதிகரிப்பதற்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். இதையெல்லாம் இந்த அரசு கட்டுப்படுத்த தவறியது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இரட்டை இலை எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பதாக கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் விழித்துக் கொள்ள வேண்டும். அ.ம.மு.க மக்களின் ஆதரவு, கூட்டணியின் உதவியுடன் திமுகவை வீழ்த்த வேண்டும். திமுகவிற்கு உதவி செய்யும் பி டீம் ஆக இருக்கிற பழனிச்சாமியையும் வீழ்த்துகிற காலம் 2026 ஆம் ஆண்டில் வரும். மேலும் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அதிமுக தொண்டர்களை ஒன்றியிருக்க வேண்டும் என கூறுவதால், அவரை அச்சுறுத்தும் வகையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.