தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக பாக்யராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பெண் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருங்கி பலக ஆரம்பித்தனர். அந்தப் பெண் ஊழியர் தனது கணவனை பிரிந்து 2 மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பாக்யராஜ் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற பாக்யராஜ் அவர்களது மகள்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் 21 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் அவரை அடித்து வெளியே விரட்டி உள்ளார். இதுகுறித்து தனது தாயிடம் கூறிய போது, பாக்யராஜிடம் அட்ஜெஸ்ட் செய்துகொள் என்று கூறியுள்ளார். இதனால் அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.