ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வசித்து வந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது நாட்டுக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே நாளில் சுமார் 1685 குடும்பங்களை சேர்ந்த 17474 ஆப்கான் மக்கள் தங்களது நாட்டிற்கு திரும்புவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு இஸ்லாம் காலா எல்லை வழியாக மட்டும் சுமார் 8000 முதல் 10 ஆயிரம் மக்கள் தாயகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நாடு திரும்பும் மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள், உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மற்றும் போக்குவரத்து வசதியை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசு வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள மக்களை தாயகம் திரும்புமாறு வலியுறுத்தி வருகிறது.