
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
गया था मछली पकड़ने लेकिन मिल गया मगरमच्छ जान बचाकर भागा बेचारा pic.twitter.com/fpLwxyQQ8Q
— Bhanu Nand (@BhanuNand) June 19, 2025
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக ஆற்றுக்குள் குதிக்கிறார். அந்த ஆற்றில் மரக்கிளைகள் கிடக்கிறது. அதன் அருகே அந்த வாலிபர் சென்ற போது திடீரென அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதாவது அந்த கிளையின் அடியில் முதலை ஒன்று பதிங்கியிருந்துள்ளது.
இந்த வாலிபர் கிளையின் அருகே சென்ற போது அந்த முதலை வேகமாக அவரை துரத்தியது. இருப்பினும் வாலிபர் அந்த இடத்திலிருந்து தப்பி வேகமாக நீந்தி வெளியே வந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.