உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மும்பையில் உள்ள மீரா ரோடு பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி உறவினர் ஒருவரின் வருகைக்காக இளம் பெண் ஆந்திரா ரயில் நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் உறவினர் வரவில்லை. இதனால் பயத்தில் அந்த பெண் அழுது கொண்டே இருந்தார். இதனை கவனித்த 31 வயது வாலிபர் ஒருவர் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணை தனது காரில் அழைத்துள்ளார். அவரை நம்பி இளம் பெண் காரில் ஏறி உள்ளார்.

அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட வாலிபர் மஹிம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம் பெண்ணை அழைத்துச் சென்ற பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அந்தப் பெண்ணை மிரட்டி பந்தரா ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு தப்பி சென்றார். அந்த பெண் அழுது கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை அடிப்படையில் மும்பை சாண்டா குரூஸ் பகுதி சேர்ந்த ஒரு வாலிபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.