
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் செக்டார் 18 பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பலரும் தங்களது உயிரை காக்க அடுக்குமாடி வீடுகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக கீழே குதிக்க முயலும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி கருப்பு புகை சூழ்ந்துள்ளதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்போ அல்லது காயம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளிவரவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணமும் தெரியவில்லை.
नोएडा सेक्टर 18 स्थित एक बिल्डिंग में भीषण आग लग गई है! लोग अपनी जान बचाने के लिए बिल्डिंग से कूद रहे हैं। @noidapolice और @cfonoida कृपया तत्काल ध्यान दें । #NOIDA #आग pic.twitter.com/tYAU1hsyUC
— Bharatiya Talk (भारतीय टॉक न्यूज़) (@BTalknews) April 1, 2025
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் உள்ள சாலை சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதுபோலவே ஒரு நாளுக்கு முன் கடந்த திங்கட்கிழமை அன்று கிரேட்டர் நொய்டாவின் எக்கோடெக் 3, ஈகோ டெக் 3 ஆகிய 2 பகுதிகளில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.