மேற்கு ஆப்பிரிக்காவின் தாக்கரில் இருந்து பெல்ஜியமுக்கு விமானம் ஒன்று சென்றுள்ளது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவர் உதவியுடன், அங்குள்ள பணிப்பெண் ஜோய் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற உதவியுள்ளார். நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையை பணிப்பெண் கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பணிப்பெண் ஜோய் கூறியதாவது, ஒரு விமான ஊழியராக மட்டுமல்லாமல் எல்லாவற்றிற்கும் வாழ்க்கையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது எனது வாழ்க்கையில் மிகச் சிறந்த அனுபவம் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்தக் குழந்தைக்கு FANTA பெயரிடப்பட்டுள்ளது.