
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
इस तरह से कुएं बावड़ी को खुला ना छोड़े क्योंकि बेजुबान इनका शिकार हो जाते हैं…लेकिन इन भाईयों को दिल से सेल्यूट है की राष्ट्रीय पक्षी मोर की जान बचाई , शानदार सराहनीय कार्य 👌🫡 pic.twitter.com/RH3VacNEs4
— Vikash Mohta (@VikashMohta_IND) June 19, 2025
அதாவது அந்த வீடியோவில் பல அடி ஆழமுள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த வாலிபர்கள் கட்டிலில் கயிற்றை கட்டி உள்ளே அனுப்பி மயிலை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் மீண்டும் கட்டிலில் கயிற்றை கட்டி உள்ளே அனுப்பி, அதன் பின் ஒரு கயிற்றின் வழியாக வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி அந்த மயிலின் தோகையைப் பிடித்து கட்டிலில் வைத்து மேலே கொண்டு வருகிறார்.
அதன் பின் அவர்கள் அந்த மயிலை விடுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த இளைஞர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.