
திருவண்ணாமலையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சிறுமியை சென்னைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காத்திருந்தார்.
இதையடுத்து ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.