உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகாரில் ரிங் சிங் என்பவர் பிறந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்- ல் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சித்தர்களை அடித்து பிரபலமானார். இதன் காரணமாக கே.கே.ஆர் அணி அவரை ரூ. 13 கோடிக்கு வாங்கிக் கொண்டது.

இவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம் பி ஆன பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் சர்வதேச பதக்கம் வென்றவர்கள் நேரடி ஆட்சேர்ப்பு விதிகள் 2022 இன் கீழ் ரிங் சிங்கை மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநில அரசு நியமித்துள்ளது.

ஏழ்மையான குடும்பப் பின்னணி காரணமாக தனது படிப்பை 9-ம் வகுப்பு உடன் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரின் தந்தை சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதேபோன்று தோனி உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு நிறுவனத்தில் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.