
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
वियतनाम का यह वीडियो दिल दहला देने वाला है, जिसमें एक व्यक्ति अपने मासूम बच्चे को बीच सड़क पर छोड़कर चला जाता है। मानवता को झकझोर देने वाला यह दृश्य अत्यंत दुखद है। pic.twitter.com/4tk6Bl6yUe
— RUDRENDRA NATH JHA (@Jharudrendra45) June 20, 2025
அதாவது வியட்நாமில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் வாகனங்கள் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தனது பின்னால் ஒரு குழந்தையையும் முன்னாள் ஒரு குழந்தையும் வைத்திருக்கிறார். இந்நிலையில் அந்த நபர் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி தனது முன்னால் இருந்த குழந்தையை நடுரோட்டில் விட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார்.
இதனால் அந்த குழந்தை அழுதபடி தவிழ்ந்து கொண்டே சாலையை கடக்கிறது. இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று குழந்தையை மீட்டனர். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.