
ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆட்டோவில் சென்ற குடும்பத்தினர் நொடியில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கர்மங்ஹாட் பகுதியை சேர்ந்த நெனாவத் அனில், சரோஜா,பானு பிரசாத், ராமவத் அனில் மற்றும் 2 வயது குழந்தை நந்தினி உட்பட அனைவரும் ஆட்டோவில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செல்லும் வழியில் திடீரென ஒரு கட்டிடத்தின் சுவர் இடிந்து ஆட்டோ மீது விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த அனில் மற்றும் சரோஜா ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அதற்கான எந்தவித பாதுகாப்பு சுவரும் அல்லது எச்சரிக்கையும் அமைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
హైదరాబాద్ – కర్మన్ ఘాట్లో ఆటోపై కూలిన కాంపౌండ్ గోడ
ప్రమాదంలో ఆటోలో ఉన్న ఇద్దరికి తీవ్రగాయాలు, ముగ్గురికి గాయాలు
నిర్లక్ష్యంగా వ్యవహరించిన బిల్డింగ్ యజమానులపై చర్యలు తీసుకోవాలని బాధితుల డిమాండ్ pic.twitter.com/RRXhuKp6yN
— Telugu Scribe (@TeluguScribe) April 3, 2025
அந்த புகாரின் படி கட்டிடத்தின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.