
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதால் அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சிம்லா, மண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போனதால், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிம்லாவில் ஓரு வீட்டில் பெற்றோர் மற்றும் பாட்டியை வெள்ளத்தில் பறிகொடுத்த 10 மாத குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
சிம்லாவில் ரமேஷ்(31), ராதா(24) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நிகிதா என்ற 10 மாத குழந்தை உள்ளது. இவர்கள் தனது தாய் பூர்ணாவுடன்(59) ஒரே வீட்டில் வசதி வந்துள்ளனர். மழை வெள்ளத்தில் ரமேஷ், ராதா, பூர்ண ஆகியோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பக்கத்து வீட்டாரின் உதவியோடு அந்தப் பெண் குழந்தை மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரியான பல்வந்த் என்பவர் அந்த குழந்தையை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார். அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.