
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பகுதியில் தேவேந்திரன் மகன் கவியரசன் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிலாளி. இவருக்கும் குரும்பூர் அருகே உள்ள பகுதியில் பேச்சு முத்து மகள் சுகன்யாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கவியரசன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அன்று சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.