மேற்கு வங்காளத்தில் ஓம்கார் ஷாகா(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஇ படித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்த இவர் அவசர கால கதவின் பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து காவல்துறையினர் அந்த மாணவரிடம் நடத்திய விசாரணையில் அறியாமல் அழுத்தியதாக கூறினார். மேலும் அந்த மாணவன் தன்னை மன்னிக்குமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து அவரிடம் காவல்துறையினர் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.