
ராமநாதபுரத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஐடி ஊழியரான வெங்கடேஷ் என்பவர் பயணித்துள்ளார். அதே போன்று சுற்றுலா வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் மகாலட்சுமி(13) என்ற சிறுமி பயணித்துள்ளார். இந்நிலையில் திடீரென கார் மற்றும் வேல் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 13 வயது சிறுமியும், ஐடி ஊழியரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐடி ஊழியர் வெங்கடேஷுக்கு அடுத்த மாதம் திருமண நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.