
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் மூட் பித்ரி முல்கி பாதையில் இஸ்ரேல் என்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து ஓடியது. அதன் பெயர் இணையத்தில் வைரலாகி பல்வேறு கண்டனங்களை குவித்தது. லெஸ்டர் கடீல் என்பவர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிய பேருந்து சேவையை தொடங்கினார். அவர் 12 ஆண்டுகளாக இஸ்ரேலில் வேலை பார்த்துள்ளார். அதனை நினைவு கூறும் நோக்கத்தோடு டிராவல்ஸுக்கு இஸ்ரேல் என்ற பெயர் வைத்தார். இந்த பேருந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த லெஸ்டர் கடீல் ஜெருசலேம் டிராவல்ஸ் என பெயரை மாற்றிவிட்டார்.
புனிதமான இடமாக ஜெருசலேம் கருதப்படுவதால் அந்த பெயரை மாற்றம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக பாலசீன நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். லெபனானிலும் இஸ்ரேல் தகதலால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயர் வைத்தது பலரின் மனதையும் புண்படுத்தும் விதமாக இருப்பதால் பேருந்து ஓனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.