மகாராஷ்டிரா மாநிலம் தம்பிவிலியில் உள்ள மொதகாவ் ரெட்டிபந்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதாவது கடந்த ஜூன் 26ம் தேதி காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது 5 தெரு நாய்கள் திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

 

காலை 10.30 மணியளவில், அந்த சிறுவன் தனியாக விளையாடி கொண்டிருந்த போது, அருகிலிருந்த நாய்களில் ஒன்று திடீரென அவரின் காலில் கடித்து கீழே வீழ்த்தியது. அதன் பிறகு மற்ற நாய்களும் சேர்ந்து அவரை கடித்து, ஆடையை பிடித்து இழுத்தன. சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கத்திக் கொண்டு இருந்தபோது, அருகில் சென்ற ஒருவரின் தலையீட்டால் அவனை அந்த நாய்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முடிந்தது.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி திரியும் சூழ்நிலை குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறுவன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அரசாங்கத்தையும் உள்ளாட்சித் துறையையும் விழிப்புணர்வுடன் செயல்பட வைக்கும் வகையில், தெரு நாய்கள் கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகத்தின் வலியுறுத்தலாக இருந்து வருகிறது.