
சென்னை அண்ணாநகர் ஓய் பிளாக் 5-வது குறுக்கு தெருவில் ஜெயலட்சுமி(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார்.
இதனால் மர்ம நபர்கள் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு 2 பவுன் நகையை பறித்து சென்றனர். இதில் காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.