
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் ஆயுஷை சரமாரியாக தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.