சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது  தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.