
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் 13 வயது தலித் சிறுமிக்கு, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் குற்றவாளிகளாக சாடப்பட்டுள்ளனர். சிறுமி கடைக்கு சென்றபோது, குற்றவாளிகளில் ஒருவர் மயக்க மருந்து கலந்த தண்ணீர் பாட்டிலை சிறுமிக்கு கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தண்ணீரை குடித்த சிறுமி மயங்கி விழுந்ததையடுத்து, குற்றவாளிகள் சிறுமியை காரில் அமர்த்தி ஓடும் காருக்குள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் நடந்த பிறகு, குற்றவாளிகள் சிறுமியை சாலையோரம் தூக்கி வீசி விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. சிறுமி பின்னர் உஷாராகி அருகிலுள்ள மக்களிடம் உதவி கோரினார். அவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.