விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் இந்த விவகாரம் தெரிந்த பகத்சிங் தலைமறைவாகிவிட்டார். மேலும் அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.