
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொழையூர் கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் (27) என்ற மகன் உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சுரேஷ் நான்காம் வகுப்பு படித்த 9 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் சுரேஷுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.