என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, அறநிலைத்துறை என்பது தமிழகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு துறை. பக்தர்கள் கஷ்டப்பட்டு கண்ணீரோடு,  ரத்தத்துல ஆண்டவனுக்கு கொடுக்கக்கூடிய நிதியை…. ஆண்டவனுக்காக பயன்படுத்தாமல், அதிகாரிகள் நன்றாக வாழ்வதற்கு இன்னோவா கார்…. இது போன்ற வளாகம் மாரியம்மன் கோவிலில்…. சமயபுரத்தில்,  திருவண்ணாமலையில் காட்டினால்  கமிஷன் கிடைக்குமா ?

இன்னிக்கு மூன்று நாட்களாக பார்த்துக் கொண்டிருப்பீர்கள்…  திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பிரச்சனை…  என்ன பிரச்சனை என்று பார்த்திருப்பீங்க ? டெய்லி போராட்டம் நடக்குது….  எதுக்குயா கட்டணத்தை எல்லாம் ஏத்தி விட்டுட்டீங்க….  நூறு ரூபாய் இருந்த சிறப்பு தரிசனம் ஆயிரம் ரூபாய் ஆயிடுச்சு…..    இன்னிக்கி சாதாரண மனிதன் கோயிலுக்கு போனால்  கூட,  ஆயிரம் ரூபாய் பணம் இருந்தால் தான் கடவுளை பார்க்க போக முடியும்…

சாமானிய மனிதர்கள் ஆயிரம் ரூபாய் பணம் இல்லாதவர்கள் கடவுள் பக்கம் போக முடியாது என்பது அறநிலைத்துறை தமிழகத்தில் வந்த பிறகு… விஐபி, சாதாரண மனிதர்கள், பொது வரிசை, விஐபி வரிசை, முக்கியஸ்தரர்களுக்கு என்று மாற்றி…  சாதாரண மனிதர்களிடமிருந்து கடவுளை தூரமாகவும்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கூட அறநிலைத்துறை தமிழகத்தில் வந்த பிறகு வைத்திருக்கின்றார்கள்…

அதனால் தான் உறுதியாக இந்த மண்ணிலே இதை சொல்கிறோம்….  மாரியம்மன்,  சமயபுரம் அம்மன் இருக்கக்கூடிய மண்… பாரதிய ஜனதா கட்சியினுடைய கொள்கை முழக்கம்,  நாங்கள் ஆட்சிக்கு வரும் பொழுது… உங்களுடைய அன்பு எல்லாம் பெற்று…. நீங்கள் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமத்தும் பொழுது….. கடவுளை ஒரு சாமானிய மனிதனுக்கு பக்கத்தில் கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சியினுடைய கடமையாக இருக்கும் சகோதர,  சகோதரிகளே என தெரிவித்தார்.