
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் விடுபட்ட பெண்களுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்படும்.
பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தரும் திட்டம் ஒன்று உள்ளது. ஒரு வீடு கட்ட 1.20 லட்சம் தராங்க. இந்த காசுல வீடு கட்ட முடியுமா? அதுலயும் 72 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் ஒன்றிய அரசு தருகிறது. மீதி கூடுதலாக 1.62 லட்சம் மாநில அரசு கொடுத்து வீடு கட்டி தருகிறோம். பெயர்தான் அவங்களோடது. நிதி நம்முடையது. அதனால் தான் ஏற்கனவே நான் ஒரு டயலாக் சொன்னேன். மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது என கூறியுள்ளார்.