
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விதிகளை மீறியதாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 71 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது.
மோசடி செயல்களை தடுக்கும் வகையில் மாதந்தோறும் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் whatsapp கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி வருகிறது. அதன்படி பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் விதிகளை மீறுவோரின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.