
சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (65) இவர் வனவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சண்முக செல்வி. இந்த தம்பதியினருக்கு தமிழ் அழகன்(23) வெங்கடேஷ்(17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
சண்முகவள்ளிக்கு மனநல பாதிப்பு இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் இருந்த செல்வகுமார் இரண்டாவது திருமணம் செய்வதற்காக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த தமிழழகன் தனது தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த செல்வகுமார் தமிழழகனை பலமாக தாக்கியுள்ளார். பதிலுக்கு தமிழழகனும் செல்வகுமாரை தாக்கி அவரது கழுத்தை கத்தியால் அறுத்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.