திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் குடும்பத்துடன வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 14000 ரொக்க பணம் போன்றவற்றை திருடிவிட்டு சென்றுள்ளனர்.

மீண்டும் வீட்டிற்கு திரும்பிய முனுசாமி பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவைகள் காணாமல் போனதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு மூதாட்டி தான் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

அதாவது முனுசாமி வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட 60 வயது மூதாட்டி வீட்டின் சுவர் ஏறி குதித்து நகை, பணம் போன்றவற்றை திருடிவிட்டு சென்றுள்ளார். இதனை அவர் கடையில் அடகு வைத்து 3,25,000 ரூபாய் பணம் வாங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை கைது செய்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..