
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியமைத்த இரு தேர்தல்களிலுமே பாஜக மெஜாரிட்டி எம்பிக்களை பெற்றிருந்தது. ஆனால், இந்தமுறை போதிய எம்பிக்கள் பலம் இல்லாததால் கூட்டணியாட்சியை அமைக்கவிருக்கிறார் மோடி.
இதுகுறித்து நேற்று அமைச்சரவையில் பேசிய அவர், “எனக்கு கூட்டணியாட்சியை வழிநடத்த தெரியாது என்று விமர்சிக்கின்றனர். 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறேன்” என்று சூளுரைத்ததாக தெரிய வந்துள்ளது.