ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார் பகுதியில் ஒரு பெண் தன் கணவர் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் 18 வயதுக்கு உட்பட்ட இரு சிறுமிகளுக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் உடல் நலக்குறைவுக்கான காரணம் குறித்து சிறுமியின் தாயிடம் விசாரித்த போது தான் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

அதாவது அந்த சிறுமிகளின் தந்தை இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக தன்னுடைய சொந்த மகள்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி தாய்க்கு தெரிந்தும் அவர் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

பின்னர் இது பற்றி காவல்துறையினருக்கு ஒரு தொண்டு அமைப்பின் மூலமாக டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் தன்னுடைய மகள்களுக்கு கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.