
பெங்களூருவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோகம்கல்புர்கியைச் சேர்ந்த அவினாஷ் (38), அவரது மனைவி மம்தா (30), மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆதிரா (5) மற்றும் அண்ணய்யா (3) ஆகியோர் பெங்களூருவின் சிக்கநாயகனஹள்ளியில் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வந்தனர். ஒவ்வொரு தசராவிற்கும் சொந்த ஊருக்கு செல்லும் பழக்கம் இருந்த இந்த குடும்பம், இந்த முறை ஊருக்கு செல்லாமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவினாஷின் சகோதரர் அவர்களை அழைத்த போது, எந்தப் பதிலும் இல்லை. வீட்டின் கதவுகள் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்த போது, குடும்பத்தினர் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று உடல்களை மீட்டனர்.
மம்தா மற்றும் குழந்தைகள் தரையில் படுத்து உயிரிழந்த நிலையில் இருந்தனர், அவினாஷ் தூக்கில் தொங்கியிருந்தார். உடனே உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இது தற்கொலை என நினைக்கப்பட்டாலும், மரணத்திற்கு இருந்த காரணம் மற்றும் குழந்தைகள், மம்தா எப்படி இறந்தனர் என்பது பிரேதபரிசோதனை முடிவில் தான் தெளிவாக தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.