கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பகுதியில் சேத்தன்(45), ரூபாலி(43) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குஷால்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சேத்தனின் தாய் பிரியம்வதா(62) என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவர்கள் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சேத்தன் தனது குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, அதன் பின் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இருப்பினும் உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படவில்லை. இந்த மர்மமான உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.