
கர்நாடக மாநிலத்தில் உள்ள புவனகட்டே கிராமத்தில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 18 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஐடிஐ காலேஜில் படித்து வந்துள்ளார். இதில் விக்னேஷ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ஒரு பைக் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 17 பற்களை இழந்துள்ளார். செயற்கைப் பற்களை பொறுத்த முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இதன் காரணமாக விக்னேஷை பற்கள் இல்லை என்று கூறி அக்கம் பக்கத்தினர் மற்றும் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் கேலி செய்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சம்பவ நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கள் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.மேலும் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விக்னேஷ் கடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.