க்ஷக்ஷபீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டம் லாலா அமுனா கிராமத்தைச் சேர்ந்த பிக்குவின் கொலைச் சம்பவம் தற்போது மாநிலத்தையே அதிரவைத்து இருக்கிறது. அவரது மனைவி பூஜா மற்றும் அவரது காதலன் கமலேஷ் யாதவ் இணைந்து இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். “மருந்து வாங்கவேண்டும்”எனது கணவரை கயாஜி எனும் இடத்திற்கு அழைத்துச் சென்ற பூஜா, திரும்பும் வழியில் ஸ்கார்பியோ வாகனம் மூலம் அவரை மோதச் செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணி மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. பிக்குவின் அவரது மனைவிக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்தனர். காதலன் கமலேஷ், குழந்தைகளை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு பூஜாவுடன் தனியாக நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பயத்தில் குழந்தைகள் இது பற்றி எவரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளனர். இப்போது, தங்களது அப்பாவை இழந்த அந்த பாசமான குழந்தைகள் செய்த தவறு என்ன என்ற கேள்வி சமூகத்தையே வேதனையில் ஆழ்த்துகிறது.

பிக்குவின் தாயார் அளித்த விளக்கம் இந்த சம்பவத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. தனது மகனைக் கொன்ற மருமகள் பூஜா மற்றும் அவரது காதலனுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று அவர் காவல்துறையிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். “இது போன்ற செயலை மேற்கொள்ளும் எந்த பெண்ணும் நூறு முறை யோசிக்கட்டும்” என்பதே அவரது கோரிக்கை.

இந்த வழக்கை விசாரித்து வந்த பந்தேயா காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் பூஜாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பூஜா தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். தற்போது, அவரது காதலன் கமலேஷ் யாதவ் தேடப்படுகிறார். விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதியுடன் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.