
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் மாவட்டம் லால்தாங்கி பகுதியில் இருந்து ஒரு பேருந்து பவுரி பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 முதல் 50 பேர் இருந்தனர். அவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இந்த நிலையில் சிமண்டி கிராமம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும் ஊர் மக்களும் மீட்பு படையினரின் உதவியோடு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் .விபத்தில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.