
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் போரை நிறுத்த அதிபர் டிரம்ப் விரும்புகிறார். அதோடு ரஷ்யாவிடம் வணிக ரீதியாக உறவு மேற்கொள்ளவும் விரும்புகிறார். இதன் காரணமாக போர் நிறுத்தத்தை முன்னிட்டு அதிபர் புதினிடம் ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்வதை நிறுத்தவும் முடிவு செய்தார். அதாவது அமெரிக்கா உதவி செய்யாவிடில் போர் முடிவடைந்து விடும் என்பதால் அமெரிக்கா அதிபர் இப்படி ஒரு முடிவை எடுத்ததோடு உக்ரைனுடன் கனிம வள ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்தனர்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பாகவே ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதாவது நீங்கள் இதில் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் இல்லையெனில் நாங்கள் வெளியேறி விடுவோம் என்று ஜேடி வான்ஸ் கூற நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம் இத்தனை நாட்களாக நீங்கள் செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி என்று ஜெலன்ஸ்கி கூறினார். அதன் பிறகு பேசிய டிரம்ப் இது இப்படியே சென்றால் பிரச்சனைகள் இன்னும் சிக்கலாகும் என்றார்.
அதன்பிறகு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதுதான் ராஜதந்திரம் என்று கூறினார். அப்போது பேசிய ஜேடி வான்ஸ் உங்கள் நாட்டில் போராடுவதற்கு ஆண்களே இல்லை என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த ஜெலன்ஸ்கி எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் என்றார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் உடனே டிரம்ப் குறுக்கிட்டார். அவர் நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போடாவிடில் நாங்கள் வெளியேறி விடுவோம் என்றார். அதன்பிறகு நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா. உங்களிடம் போதுமான ராணுவம் இல்லாததோடு நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறீர்கள்.
நாங்கள் இல்லாமல் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது. ஒருவேளை அமெரிக்கா மட்டும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் இந்த போர் எப்போது முடிவுக்கு வந்திருக்கும். நீங்கள் செய்வது மிகவும் தவறு. லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப்போரோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் போரில் வெற்றி பெறவில்லை. அமெரிக்கா மட்டும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் இந்த போர் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்திருக்கும் என்றார். இப்படிப் பேச பேச ஜேடி வான்ஸ், டிரம்ப் மற்றும் ஜெலன்சி இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத் தொடர்ந்து ஜெலன்ஸ்கி அங்கிருந்து வெளியேறினார்.மேலும் அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக இருந்தால் மீண்டும் அமெரிக்காவுக்கு வாருங்கள் என்று தெளிவாக கூறிவிட்டார்.