தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் நடிகர் ஜேம்ஸ் ரூவாங்சக் லொய்ச்சுசக், 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விமான விபத்தில் 11A என்ற இருக்கையில் அமர்ந்தபடியே உயிர்தப்பியவர். அந்தக் கோர விபத்து 1998ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்தது. Thai Airways TG261 விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 101 பேர் உயிரிழந்தனர். ஜேம்ஸ் உயிர் பிழைத்தாலும், அந்த அனுபவம் அவரை பல ஆண்டுகள் விமானம் ஏறத் தைரியம் இல்லாதவராக மாற்றியது.

சமீபத்தில் இந்தியாவின் அஹமதாபாத்தில் ஏர் இந்தியா AI171 விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்த நிலையில், ஒரே நபர் மட்டுமே உயிர்தப்பியுள்ளார் – அவர் விஷ்வாஷ்குமார் ரமேஷ் என்ற பிரிட்டிஷ்-இந்தியர். ஆச்சரியமளிக்கவல்ல செய்தி என்னவென்றால், அவர் அமர்ந்திருந்த இருக்கை மீண்டும் அதே 11A. இது குறித்து ஜேம்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில், “இந்தியாவில் உயிர்தப்பிய நபர், எனது போல் 11A இருக்கையில்தான் இருந்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு புல்லரித்து விட்டது.  இது மிக அதிசயமானது” எனக் கூறியுள்ளார்.

இந்த இரட்டைக் கூட்டு நிகழ்வு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதனை “எளிமையாக நம்ப முடியாத ஒற்றுமை”, அபூர்வமான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வு” எனக் கூறியுள்ளனர். மேலும், விபத்துக்கு இரண்டு நாட்கள் முன்னர், ஒரு பயணக் கட்டுரை “11A இருக்கையை தவிருங்கள்” என எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது, அந்த இருக்கையின் வசதிக்குறைவைக் குறித்து இருந்தாலும், தற்போது அந்த இடத்தில் இரண்டு பேரும் பெரிய விமான விபத்திலிருந்து உயிர்தப்பிய நிகழ்வால், 11A இருக்கை ஒரு ‘அதிசயத்தின் அடையாளமாக’ மாறியுள்ளது.