உத்தரப்பிரதேச மாநிலம் வரணாசியில், 19 வயது பெண் ஒருவர் மீது 23 பேர் பலாத்காரம் செய்ததாக வெளியான புகாரில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது புகார் அளித்த பெண்ணின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை மேல்முறையாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட மொபைல் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள புகைப்படங்களில், புகார் கூறிய பெண் தனது விருப்பத்துடன் நடந்துக் கொண்டதும், சிரித்தபடியே மோட்டார் சைக்கிளில் பயணித்ததும், மற்றும் Instagram-ல் பதிவுகள் போட்டதும் காணப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 1-ம் தேதி Continental Cafe அருகே வீடியோவில், புகாரளித்த பெண் சில குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுடன் இருந்தபோது எடுக்கப்பட்டதோடு, அந்த சூழ்நிலை “மனப்பூர்வமானது போலவே” இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பெண்மணி உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது மருந்து கொடுக்கப்பட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

 

அந்த பெண் தனது FIR-ல், மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை 23 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், பல இடங்களில் கடத்தப்பட்டதாகவும், மருந்து கொடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், ஏப்ரல் 2-ம் தேதி Instagram-ல் பதிவிட்ட புகைப்படம், குறித்த வாரத்தில் வெளியிட்ட பல பதிவுகள், மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுடன் நடந்த சமூக ஊடக உரையாடல்கள், வழக்கை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளன.

வரணாசி காவல்துறை ஆணையர் மோகித் அகர்வால் கூறியதாவது, “குற்றவாளிகள் எனக் கூறப்பட்டவர்களின் குடும்பத்தினர் வீடியோக்கள், புகைப்படங்கள், Instagram உரையாடல்கள் போன்ற பல ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில், பெண்மணி சுய விருப்பத்துடன்  இருந்ததைக் காட்டும் ஆதாரங்கள் உள்ளன.

மேலும் சிலர் பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும் புகார் அளித்துள்ளனர்” எனக் கூறினார். இதன் அடிப்படையில், புதிய உண்மைகளை நன்கு ஆராய்வதற்காக DCP ரேங்கில் உள்ள அதிகாரி தலைமையில் SIT அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உண்மையா அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஏமாற்று முயற்சியா என்பதை போலீசார் விரைவில் உறுதி செய்ய உள்ளனர். SIT விசாரணையின் முடிவில் பொய்புகாராகத் தெரிய வந்தால், பெண்மணியும், அவரது குடும்பத்தாரும் எதிராக குற்றவியல் நடவடிக்கையும் எதிர்பார்க்கலாம்.

23 பேரின் பெயர் FIR-ல் இருந்தாலும், தற்போது போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்பாக முழுமையான உண்மையை உறுதி செய்ய முனைந்துள்ளனர்.