தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படம் மூலமாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இந்த படத்தை தொடர்ந்து 100% காதல், மகாநதி, சைலன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர், திரை துறையில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது 23 வயது தான் ஆனது.

எனக்கு எந்த திரைப்பட பின்னணியும் இல்லை. அப்போது அந்த படப்பிடிப்பின் போது கேரவனில் உடைமாற்றிக் கொண்டிருந்தேன். அந்த இயக்குனர் வேண்டும் என்று அத்துமீறி கேரவன் உள்ளே நுழைந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. கோபத்தில் கனத்த குரலில் வெளியேற சொன்னேன். இந்த சினிமா துறையில் அதன் பிறகு தான் என்னை காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை நானே கற்றுக் கொண்டேன். நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள்” என்று கூறினார்.