
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, மக்களின் அன்பை பெற்றவர்கள் மற்றும் மக்களோடு சேர்ந்து பயணிப்பவர்களுக்கு எதிராக தேர்தல் வியூகம் மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்பது தெரியவில்லை.
நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்துள்ள நிலையில் அதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் ஒரு சாட்சி. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் சொன்னது போன்று 200 இடங்களை தாண்டி வெற்றி பெறுவோம். மேலும் தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறை மீண்டும் ஸ்டாலின் அமர்வார் என்று கூறினார். மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.