
தமிழகத்தில் இன்று 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன்படி திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தொழிற்சாலை, டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக முதல்வர் ஸ்டானினிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு. ஸ்டாலின் அவர்களே.
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு @mkstalin?
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக… pic.twitter.com/XZuScwoLHj
— K.Annamalai (@annamalai_k) March 6, 2025