அயர்லாந்தில் உள்ள கார்லோ நகரில் வசித்து வந்த நண்பர்கள் செருகுரி சுரேஷ், பார்க்லகவ் சிந்துரி. இவர்கள் அயர்லாந்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த இருவரும் கார்லோ  நகரில் தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று நண்பர்கள் 4 பேரும் காரில் மவுண்ட் லென்ய்ஸ்டர் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது நண்பர்கள் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று ஒரு மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே செருகுரி சுரேஷ், பார்க்லகவ் சிந்துரி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு நண்பர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். படுகாயம் அடைந்த இளைஞர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.