![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/04/e6fec3c3-856e-4745-81c7-8c9b1f00abe6.jpg)
தமிழ் சினிமாவில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் போன்ற சீரியல்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையில் நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை ரேஷ்மா பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய முதல் திருமணம் என் பெற்றோர் பார்த்து நடத்தி வைத்தது தான். அவர் என்னை அடிமை போல் மிகவும் மோசமான முறையில் நடத்தியதால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன். இதைத்தொடர்ந்து நான் அமெரிக்கா சென்று விட்டேன். அங்கு ஒரு பாக்ஸரை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணம் முடிந்த பிறகு தான் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக நான் கேட்டபோது அவர் என்னை அடித்துவிட்டார்.
அப்போது நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தேன். இதனால் எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு நானே காரை எடுத்துக் கொண்டு சென்றேன். அங்கு எனக்கு குழந்தை பிறந்தது. என் மகன் 4 மாதங்கள் வரை இன்குபேட்டரில் தான் இருந்தான். குழந்தை பிழைக்காதோ என நான் கவலையில் இருந்த நிலையில் கடவுள்தான் என்னுடைய குழந்தையை உயிருடன் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நான் அந்த நபரை விவாகரத்து செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டேன். என் மகனின் மருத்துவ செலவுக்காக எனக்கு பணத்தேவை இருந்தது. இதனால் சாப்பிடக்கூட நேரமில்லாமல் வேலை பார்ப்பேன். என்னுடைய மகனுக்கு தினசரி பிசியோதெரபி செய்ய வேண்டும். மேலும் மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எண்ணம் மட்டும்தான் தனக்கு இருந்ததாக கூறியுள்ளார்.