
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் நேற்று சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏராளமான ரசிகர்கள் வெளியே குவிந்ததால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு விராட் கோலியும் இந்த சம்பவத்தை கேட்டு மிகவும் மனமுடைந்து போனதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆர்சிபி நிர்வாகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் கூட்டாக உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளதோடு இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.