
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்தப் பகுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்ததும், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருப்பதி(21), மூக்கன்(60), ராணி(50), முத்து(62) ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.