
ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது 17 வயது சிறுவன் மீது, ஒரே வீட்டில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்ததும், அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சிறுவன் 18 வயதுக்கு குறைவாக இருப்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது
அந்த பெண்ணும் சிறுவனும் ஒரே வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என கூறப்பட்டாலும், சிறுவன் குறைந்த வயதுடையவராக இருப்பதால், சம்மதம் இருந்தாலும் அது சட்டப்படி தவறாகவே கருதப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் பேரில், போக்சோ சட்டத்துடன், இந்திய நியாயச் சட்டத்தின் (BNS) பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வயது மூத்த பெண் அந்த சிறுவனை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.