கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகுமார்(31). இவர் கட்டிடம் மேஸ்திரி. கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானகுமார் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தானகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் சந்தான குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.